கீவ்: உக்ரைனில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதால் இங்குள்ள இந்திய பிரஜைகள் உக்ரைனை விட்டு உடனே வெளியேறுமாறு இந்திய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா இடையிலான தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், ‘அனைத்து இந்திய பிரஜைகளும் உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும். உக்ரைனில் பாதுகாப்பற்ற சூழல் அதிகரித்து வருவதால், இந்த ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன’ என்று தெரிவித்துள்ளது.