மும்பை: கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து திரைக்கு வந்த படம், ‘காந்தாரா’. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ள இப்படம், தற்போது ரூ.200 கோடியை வசூலித்துள்ளது. பல்வேறு தரப்பில் இருந்து இப்படத்துக்கு பாராட்டும், ரசிகர்களிடம் வரவேற்பும் கிடைத்துள்ள நிலையில், படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப வேண்டும் என்று நடிகையும், இயக்குனருமான கங்கனா ரனவத் கூறியுள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டு இருக்கும் பதிவு வருமாறு: ‘காந்தாரா’, அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கான இந்திய நுழைவாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.