காந்தாரா படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும்; கங்கனா ரனவத்

மும்பை: கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து திரைக்கு வந்த படம், ‘காந்தாரா’. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ள இப்படம், தற்போது ரூ.200 கோடியை வசூலித்துள்ளது. பல்வேறு தரப்பில் இருந்து இப்படத்துக்கு பாராட்டும், ரசிகர்களிடம்  வரவேற்பும் கிடைத்துள்ள  நிலையில், படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப வேண்டும் என்று நடிகையும், இயக்குனருமான கங்கனா ரனவத் கூறியுள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டு இருக்கும் பதிவு வருமாறு: ‘காந்தாரா’,  அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கான இந்திய நுழைவாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

இந்த ஆண்டு இன்னும் முடியவில்லை என்பதும், இன்னும் நல்ல படங்கள் வரலாம் என்பதும் எனக்கு தெரியும். ஆஸ்கர் விருதைக் கடந்து இந்தியாவுக்கு உலக அளவில் மிகச்சரியான பிரதிநிதித்துவம் தேவை. மர்மங்கள் மற்றும் ஆன்மிகம் நிறைந்த இந்த நிலத்தை ஒருவராலும் புரிந்துகொள்ள முடியாது. மாறாக, தழுவிக்கொள்ள மட்டுமே முடியும். இந்தியா ஒரு அதிசயம் போன் றது.  நீங்கள் அதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தால்  விரக்தி அடைவீர்கள். அதன் அதிசயங்களில்  சரண் அடைந்தால், நீங்களும் அதில் ஒன்றாக இருக்கலாம். ‘காந்தாரா’ என்பது ஒரு அனுபவிக்கக்கூடிய யதார்த்த உலகம்.

Related Stories: