மன அமைதிக்கு இடம் கொடுக்க சொல்லிவிட்டு 2-வது மனைவியையும் பிரிந்தார் பாலா

சென்னை: தமிழில் வெளியான ‘அன்பு’, ‘காதல் கிசுகிசு’, ‘அம்மா அப்பா செல்லம்’, ‘கலிங்கா’, ‘மஞ்சள் வெயில்’, ‘வீரம்’,  ‘தம்பி’ போன்ற படங்களில் நடித்தவர், பாலா. இவர், இயக்குனர் சிவாவுடைய தம்பி. தெலுங்கில் ஓரிரு படங்களில் நடித்துள்ள பாலா, மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்துள்ளார். கடந்த 2010ல் பாடகி அம்ருதா சுரேஷை காதல் திருமணம் செய்தார் பாலா. அவர்களுக்கு அவந்திகா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2016ல் அம்ருதாவை விவாகரத்து செய்தார் பாலா. பிறகு சில வருடங்கள் தனிமையில் வசித்து வந்த அவர், கடந்த 2021 செப்டம்பர்மாதம் கேரளாவை சேர்ந்த டாக்டர் எலிசபெத்தை காதலித்து, அவரை 2வது திருமணம் செய்தார். அவர்கள் திருமணம் நடந்து ஒரு வரு டம் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பாலா 2வது மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து வீடியோ வெளியிட்ட பாலா, பிறகு அதை நீக்கிவிட்டார். அந்த வீடியோவில் அவர் பேசும்போது, ‘முதல் திருமணம் தோல்வியில் முடியும் போது, அதுபற்றி பெரிதாக நினைக்கவில்லை. அதே நேரம் 2வது திருமணமும் தோல்வி என்றால், உடனே அதுபற்றி நினைக்கத் தொடங்குகிறோம். உங்க ளில் பலர் நான் எலிசபெத் துடன் பேசக்கூடாது என்று வற்புறுத்துகிறீர்கள். அவர் என்னைவிட சிறந்த நபர். அவர் ஒரு டாக்டர். அவரது மன அமைதிக்கு சிறிது இடம் கொடுங்கள். அவர் ஒரு பெண். நான் எல்லாவற்றையும் மாற்றுவேன். என் வாழ்க்கையில் இது வலி மிகுந்த நாட்கள். நான் என்னைப் பற்றி பேசுவதற்கு தகுதி வாய்ந்த நபர்தான். ஆனால், இப்போது அதை நான் செய்யப்போவதில்லை. தயவுசெய்து யாரும் என்னைத் தூண்டிவிட வேண்டாம்’ என்று கூறியுள்ளார்.

Related Stories: