நாடாளுமன்ற தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை: கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்பு

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில தலைமைக்குழு கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். 

Related Stories: