மதுரை : தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீனவர் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மயிலாடுதுறை மீனவர் ஒருவர் காயம் அடைந்துள்ளார். இதையடுத்து இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் காயமடைந்த மீனவர் மீட்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இந்நிலையில் காயமடைந்த மீனவரை சந்தித்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்;