பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள திருவள்ளுவர் சிலை பீடத்தை சட்ட விரோதமாக இடித்த பாஜக நிர்வாகியை கைது செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2009ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள அல்சூர் ஏரி கரையில் அப்போதைய முதலமைச்சராக இருந்த எடியூரப்பா தலைமையில் நடந்த விழாவில் அன்றைய தமிழக முதலமைச்சர் கலைஞர் திறந்து வைத்தார். இந்த நிலையில் சிலை அமைத்துள்ள பூங்காவை புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்து சிவாஜி நகர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரிஸ்வான் அர்சத் பணிகளை துவங்கி உள்ளார். திருவள்ளுவர் சிலையை சுற்றி பிரம்மாண்ட பீடம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.