அண்ணாநகர்: சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண், நேற்றுமுன்தினம் பணி முடிந்து வீட்டுக்கு சென்றுள்ளார். அமைந்தகரை என்.எஸ்கே.நகர் வழியாக சென்றபோது அவ்வழியாக குடிபோதையில் சென்றுகொண்டிருந்த போதை ஆசாமி ஒருவர், திடீரென அந்த இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், கூச்சலிட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிவந்தபோது போதை ஆசாமி தப்பியோடிவிட்டார்.