அமைந்தகரையில் சாலையில் சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: போதை ஆசாமி கைது

அண்ணாநகர்: சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண், நேற்றுமுன்தினம் பணி முடிந்து வீட்டுக்கு சென்றுள்ளார். அமைந்தகரை என்.எஸ்கே.நகர் வழியாக சென்றபோது அவ்வழியாக குடிபோதையில் சென்றுகொண்டிருந்த போதை ஆசாமி ஒருவர், திடீரென அந்த இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், கூச்சலிட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிவந்தபோது போதை ஆசாமி தப்பியோடிவிட்டார்.

இதுதொடர்பாக இளம்பெண் கொடுத்த புகாரின்படி, அமைந்தகரை ஆய்வாளர் கிருபாநிதி தலைமையில் போலீசார் வழக்குபதிவு செய்து போதை ஆசாமியை தேடி வந்தனர். இந்தநிலையில், இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டவில் ஈடுபட்ட அமைந்தகரை என்.எஸ்.கே நகரை சேர்ந்த சீனிவாசன்ராவ்(42) என்ற கூலி தொழிலாளியை கைது செய்தனர். இதையடுத்து சீனிவாசன்ராவை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: