ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகள் வீசிய கையெறி குண்டுகளால் உத்தர பிரதேசத்தை சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஷோபியான் மாவட்டம், ஹார்மென் பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் சிலர், இன்று அதிகாலை கையெறி குண்டுகளை வீசியதில் இரண்டு புலம்பெ யர்ந்த தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் உள்ளூர் தீவிரவாதிகள் சிலர், ஹார்மென் பகுதியில் வசிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீது கையெறி குண்டுகளை வீசினர்.