சென்னை: கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்துக்கு 14 அலுவல்சாரா உறுப்பினர்கள் நியமனத்திற்கு வருகிற 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு கைம்பெண்கள் (ம)ஆதரவற்ற மகளிர் நல வாரியம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்புடன் கண்ணியமான முறையில் வாழ்வதற்காக ”கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம்” உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாரியத்திற்கு 14 அலுவல்சாரா உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட வேண்டியுள்ளது. கைம்பெண்கள் பிரதிநிதிகள்-4 நபர்கள்(பட்டியலினத்தவர்-1, பழங்குடியினர்-1, இதர வகுப்பினர்-2) கல்வியாளர்கள்-2 நபர்கள், பெண் தொழில் முனைவோர்கள்-2 நபர்கள், பெண் விருதாளர்கள்-2 நபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பெண் பிரதிநிதிகள்-4 நபர்கள்.