இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) ஆட்சி, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் கடந்த ஏப்ரல் மாதம் கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து, பிடிஐ கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்தனர். அந்த தொகுதிகளுக்கு பல கட்டங்களாக இடைத்தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.