மும்பை: வரும் டிசம்பர் மாதம் ஹன்சிகா காதல் திருமணம் நடக்கும் என்றும், இதற்காக ஜெய்ப்பூரில் 450 ஆண்டுகள் பழமையான அரண்மனை ஒன்றில் தடபுடல் ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தி டி.வி தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹன்சிகா, பிறகு தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். பிறகு சில இந்தி மற்றும் கன்னடப் படங்களில் நடித்தார். தமிழில் வெளியான ‘மஹா’ படத்தின் மூலம் 50 படங்களை முடித்துள்ள அவர், தற்போது தமிழிலும், தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு வரும் டிசம்பர் மாதம் புகழ்பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனையில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக 450 ஆண்டுகள் பழமையான ஜெய்ப்பூர் கோட்டை மற்றும் அரண்மனை புதுப்பிக்கப்பட்டு வருகிறதாம்.