மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1 லட்சம் கனஅடியாக உயர்வு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 65,000 கனஅடியில் இருந்து 1 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது. நீர்மின் நிலையங்கள் வழியாக 21,500 கனஅடி நீரும், 16 கண் மதகுகள் வழியாக 78,500 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக நீர் வெளியேற்றப்பட்டு உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: