வேளச்சேரி: வேளச்சேரி அடுத்த பெரும்பாக்கம் எழில் நகர் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மனைவி சுபத்ரா (32). ஏற்கனவே திருமணமான இவர், கருத்து வேறுபாடு காரணமாக, முதல் கணவரை பிரிந்து விட்டார். மது பழக்கத்திற்கு அடிமையான சுபத்ராவுக்கு முதல் கணவர் மூலம் பிறந்த ஏழு வயது மகன் உள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த சுபத்ரா, அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு, மயங்கி கிடந்துள்ளார். வேலைக்கு சென்ற பார்த்திபன் மாலை வீட்டுக்கு வந்தார். அப்போது, மனைவி போதையில் பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு, செம்மஞ்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார்.