டேராடூன்: உத்தர பிரதேச மாநிலம்., மொரதாபாத்தில் சுரங்கம் சம்பந்தப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்தவன் சபர். இவனை பற்றி துப்பு கொடுத்தால் ரூ.50 ஆயிரம் பரிசு அளிப்பதாக உபி போலீசார் அறிவித்து இருந்தனர். இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜஸ்பூர் கிராமத்தில் இவன் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததும், உபி போலீஸ் தனிப்படை அங்கு விரைந்தது. அங்குள்ள உள்ளூர் பாஜ தலைவர் குர்தா ஜ் புல்லரின் வீட்டில் அவன் பதுங்கி இருப்பதாக சந்தேகித்த உபி போலீசார், அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது, அந்த கிராம மக்கள் போலீசாரை தாக்கினர். இருதரப்புக்கும் போலீஸ் துப்பாக்கிச் சண்டை நடந்தது.