ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த பாம்பன் சாலை பாலத்தில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிகொண்டத்தில் 11 பேர் காயமடைந்தனர். சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற ஆம்னி பேருந்து பாம்பன் சாலை பாலத்தில் பைக் ஒன்றை முந்த முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதியது. அதிர்ஷ்டாவசமாக தனியார் பேருந்து பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி நின்று விட்டது. ஒரு வேலை கடலுக்குள் பாய்ந்து இருந்தால் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கும்.