சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள நியூ கல்லூரியில் வருகிற 15ம் தேதி மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் கோ.வீரராகவ ராவ் வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 15ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள நியூ கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 300க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்களால் 40,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளது. முகாமில் 8ம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்களும், ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மசி மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.