ஜம்மு: தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி அளித்தது தொடர்பாக ஜம்முவில் 18 இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது. தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்து, அவர்களுக்கு நிதியுதவி அளித்து வருபவர்களை ரகசியமாக கண்காணித்து, பல்வேறு இடங்களில் தேசிய புல னாய்வு அமைப்பு (என்ஐஏ) சோதனை நடத்தி கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, ஜம்மு காஷ்மீரை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் அல் ஹுதா கல்வி அறக்கட்டளை மூலம் நன்கொடைகள், ஹவாலா மூலம் நிதி திரட்டி, அதை ஜம்மு காஷ்மீர் இளைஞர்களை தீவிரவாதிகளாக செயல்பட தூண்டிவிடவும், இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை சீர்குலைக்கவும் இந்த அமைப்பு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.