தேவர் குருபூஜையில் பங்கேற்பு: அக்.30ம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி?

டெல்லி: ஒரு நாள் பயணமாக அக்டோபர் 30ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகிற 30ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை நடைபெற உள்ளது. பசும்பொன்னில் நடைபெறவுள்ள தேவர் ஜெயந்தி குரு பூஜை விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குருபூஜை நிகழ்வில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பினை ஏற்று பிரதமர் மோடி வரும் 30ஆம் தேதி தமிழக வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாஜகவின் முக்கிய மற்றும் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க உள்ளதாவும் கூறப்படுகிறது. பிரதமர் பசும்பொன் வருகை தந்தால் ராமேஸ்வரம் செல்ல வாய்ப்பு என்றும் கூறப்படுகிறது. விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் டெல்லி விரைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரதமரின் தமிழக வருகை குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

Related Stories: