எதிரிகளை அழிக்கும் அணு ஆயுதங்கள் தயார்: வட கொரியா அதிர்ச்சி தகவல்

சியோல்: வடகொரியா தென்கொரியா நாடுகளுக்கிடையே நீண்ட காலமாக  பிரச்னை இருந்து வருகிறது. தென்கொரியா, அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும்  ஏவுகணை உள்ளிட்டவைகளை சோதித்து வருகிறது. அமெரிக்காவின் விமானம் தாங்கி போர் கப்பல் சமீபத்தில் தென் கொரியாவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. அதிலும், ஒரு ஏவுகணை ஜப்பான் வான்பரப்பை தாண்டி பசிபிக் கடலில் விழுந்தது. வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா ஏவுகணைகளை ஏவியது. இதனால், கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் எங்கு,  எந்த நேரத்தில் நிறுவப்பட்டிருந்தாலும்  அதை தாக்கி அழிக்கும் அணு ஆயுத வல்லமைகொண்ட அணு ஆயுத படைப்பிரிவு தயாராக உள்ளது என வடகொரியா தெரிவித்துள்ளது. வடகிழக்கு பகுதியில் ஏவப்பட்ட அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணை, ஜப்பான் வான்பரப்பு மேல் பறந்து சென்ற நிலத்தில் இருந்து ஏவப்பட்டு நிலத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை ஏவப்பட்டதை நாட்டின் தலைவர் கிம் ஜோங் உன் பார்வையிட்டார் என வடகொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவின் இந்த அறிவிப்பு உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: