சியோல்: வடகொரியா தென்கொரியா நாடுகளுக்கிடையே நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது. தென்கொரியா, அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உள்ளிட்டவைகளை சோதித்து வருகிறது. அமெரிக்காவின் விமானம் தாங்கி போர் கப்பல் சமீபத்தில் தென் கொரியாவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. அதிலும், ஒரு ஏவுகணை ஜப்பான் வான்பரப்பை தாண்டி பசிபிக் கடலில் விழுந்தது. வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா ஏவுகணைகளை ஏவியது. இதனால், கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.