கிறிஸ்தவ வன்னியர்களை எம்பிசி பிரிவில் சேர்க்க கோரி வழக்கு

சென்னை: கிறிஸ்தவ வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிறிஸ்தவ வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கக் கோரி பொள்ளாச்சியைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் விஜயன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுதாக்கல் செய்திருந்தார். 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் கிறிஸ்தவ வன்னியர்கள் சேர்க்கப்படவில்லை. மேலும் அவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தது.

Related Stories: