சென்னை: தீபாவளி சிறப்பு பேருந்து இயக்கம் குறித்து போக்குவரத்து அதிகாரிகளுடன், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் பொதுமக்கள் சிரமமில்லாமல் பயணம் செய்யும் வகையில் போக்குவரத்து துறையால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த நாட்களில், சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் இருந்து திருவிழா நாட்களுக்கு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க, ஆண்டுதோறும் மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.