ஆவடி: அடிப்படை வசதி செய்து தரக்கோரி ஆவடி மாநகராட்சி அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டில் பூம்பொழில் நகர் உள்ளது. இப்பகுதியில், கழிவு நீர் வசதி, குடிநீர் வசதி கோரியும் ஆனந்த விநாயகர் கோயில் தெருவில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, ஆவடி பூம்பொழில் நகர் குடியிருப்போர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே, காலை 10 30 மணியளவில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், 50 க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் கலந்து கொண்டு, அடிப்படை வசதிகளை செய்து தர கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.