சென்னை: கிராம கோயில் பூசாரிகள் ஓய்வூதிய திட்டத்திற்கு விண்ணப்பங்களை பரிந்துரை செய்ய தேர்வுக்குழு அமைத்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கிராம கோயில்களில் பணிபுரியும் பூசாரிகளின் ஓய்வூதியம் வேண்டி வரப்பெறும் விண்ணப்பங்களை பரிசீலித்து அதனை பரிந்துரை செய்வதற்கு தேர்வு குழு அமைத்து இந்து சமய அறநிலையத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கிராம கோயில் பூசாரிகள் ஓய்வூதிய திட்ட தேர்வு குழுவில் அலுவல்சாரா உறுப்பினராக சேலம் மாவட்டம் கோயில் பூசாரி நலச்சங்க தலைவர் வாசு கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.