சென்னை: விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலங்களில் மரக்கன்றுகளை நட விருப்பம் தெரிவித்தால் இலவசமாக வழங்கப்படும் என்று வனத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து வனத்துறை சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் இயக்குனர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: விவசாயிகள், தொழில் நிறுவனங்கள், மக்கள் நலச்சங்கங்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் தனி நபர்கள் மரக்கன்றுகளை எளிதில் பெறும் பொருட்டு, பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் இணையதள முகவரியில் (www.greentnmission.com) பயன்பாட்டாளர்கள் தங்களது சுய விவரங்களை பதிவு செய்து, தங்களுக்கு தேவையான மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம்.