வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்: அமைச்சர் விளக்கம்

சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வானிலை ஆய்வு மைய தகவல் படி 35-75% கூடுதலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கிறோம். தென்மேற்கு பருவமழையை விட சிறப்பாக வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வோம். தமிழ்நாடு முழுவதும் பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நிவாரண முகாம்களில் தங்க வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் கூறினார்.

Related Stories: