வணிகவரித்துறை, பதிவுத்துறை சாதனை ரூ.20,776 கோடி அதிகமாக வரி வசூல்

சென்னை: வணிக வரி மற்றும் பதிவு துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வணிகவரித்துறையில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் பல்வேறு ஆய்வு கூட்டங்கள் மற்றும் சோதனை நடவடிக்கைகளை தொடர்ந்து வரி வருவாய் அதிகமாகி கொண்டே வருகிறது. 1.4.2022 முதல் 30.9.2022 வரையிலான காலகட்டத்தில் வசூலிக்கப்பட்ட வரி வருவாய் ரூ.66,161 கோடியைவிட ரூ.18,288 கோடி அதிகமாகும். வணிகவரி வசூலில் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு 4வது இடத்தை பெற்றுள்ளது. இதைப்போலவே பதிவுத்துறையிலும் வசூல் சாதனை எய்தப்பட்டுள்ளது. 1.2.2022 முதல் 30.9.2022 வரையிலான காலகட்டத்தில் பதிவான ஆவணங்களின் எண்ணிக்கை 17,56,977 ஆகும். வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் ரூ.8,696 கோடி ஆகும். கடந்த வருடத்தில் அதாவது 30.9.2021 வரை வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் ரூ.6,208 கோடி என்ற நிலையில் கடந்த ஆண்டைவிட பதிவுத்துறையில் ரூ.2,488 கோடி வருவாய் அதிகமாக ஈட்டப்பட்டுள்ளது. இந்த வகையில் வணிகவரித்துறையும், பதிவுத்துறையும் சேர்ந்து கடந்த ஆண்டைவிட ரூ.20,776 கோடி அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது.

Related Stories: