டெல்லி: விழாக்காலத்தை ஒட்டி பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து விமான கட்டணங்கள் 20 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது . விமான எரிபொருள் விலை அதிகரித்து இருப்பதும் விமான கட்டணம் உயர்ந்துள்ளதற்கு காரணம் என்று விமான நிறுவனங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்து துர்கா பூஜை, ஆயுதபூஜை, நவராத்திரி, மிலாடி நபி, தீபாவளி விழாக்கள் வருவதால் விமான பயணிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கடந்த தசரா விழாவை விட இவ்வாண்டு திருவிழா காலத்தில் 25 முதல் 30 சதவீதம் விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பயணிகள் வருகையால் பாட்னா, மும்பை, ஜெய்ப்பூர், அகமதாபாத், வாரணாசி, ஐதராபாத் உள்ளிட்ட தடங்களில் கட்டணம் உயர்ந்துள்ளது.