அம்பத்தூர்: சென்னை வில்லிவாக்கம் அகத்தியர் நகரை சேர்ந்தவர் நரசிம்மன் (48). மாநில பாஜ முன்னாள் தொழில்துறை செயலாளர். இவர், நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் தனது காரில் வில்லிவாக்கம் நாதமுணி அருகே சென்றுள்ளார். திடீரென சாலை ஓரத்தில் நின்றுகொண்டிருந்த 4 பேர் மீது இவரது கார் மோதியது. காயமடைந்த 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.