தஞ்சாவூர்: வீட்டுக்கு போலீஸ் வந்தாலே இபிஎஸ் பயந்து விடுவார், அவர் ஒரு தொடை நடுங்கி என்று தஞ்சாவூரில் டிடிவி. தினகரன் கூறினார். தஞ்சாவூரில் மகாத்மா காந்தி பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவுநாளை முன்னிட்டு அவர்களது படத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: ஓ.பன்னீர்செல்வம் கருத்தும் எனது கருத்தும் ஒன்றாக தான் உள்ளது. நான், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் நேரம் வரும் போது ஒன்றிணைவதில் தவறு இல்லையே? ஏன் எடப்பாடி பழனிசாமி கூட நேரம் வரும்போது எங்களிடம் இணையலாம்.