வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை களப்பணிகளை கண்காணிக்க சிறப்பு அலுவலர்கள்: குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான களப்பணிகளை கண்காணிக்க சிறப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு களப்பணிகளை கண்காணிப்பதற்காக சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் அனைத்து பகுதி அலுவலகங்களிலும் 15 மேற்பார்வை பொறியாளர்கள் மற்றும் 15 செயற்பொறியாளர்கள் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, பகுதி -1க்கு பி.கற்பகம் (8144931000), என்.சிங்காரவேலன் (8144930970) ஆகியோரும், பகுதி -2க்கு டி.ஆர்.பார்த்தசாரதி (8144904904), வி.ஏ.எழுமலை (8144930570) ஆகியோரும், பகுதி -3க்கு ஆர்.சித்ரா (8144931010) சி.ஜாய்ஸ் சுமதி    (8144931122) ஆகியோரும், பகுதி 4க்கு பி.விஜயலட்சுமி (8144902902), ஜே.லட்சுமி தேவி (8939856188) ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், பகுதி -5க்கு  ஓ.பர்வீஸ் (8144903903), பாவைக்குமார் (8144930444) ஆகியோரும், பகுதி -6க்கு ஏ.ராதாகிருஷ்ணன் (8144945000) கே.ராமமூர்த்தி (8144930958), பகுதி -7க்கு ஆர்.சிவமுருகன் (8144934000), வி.அன்பரசி (8144930956), பகுதி -8க்கு ஜே.சுகந்தி (8144967000) எம்.எஸ்.அகிலாண்டேஸ்வரி (8144930728) ஆகியோரும், பகுதி -9க்கு டி.மைதிலி (8144901901), எஸ். வெண்ணிலா    (8144931144) ஆகியோரும், பகுதி -10க்கு ஆர்.கண்ணன் (8144930999), ஏ.புவனேஸ்வரன் (8144930540) ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், பகுதி-11க்கு என்.மணிமேகலை (8144906906), ஏ.புஷ்பலதா (8144930625) ஆகியோரும், பகுதி -12க்கு பி.சி.வள்ளி (8144907907), கே.உமா (8144930690) ஆகியோரும், பகுதி -13க்கு எஸ்.ரவீந்திரநாதன் (8144923000), கே.எம்.வெங்கட்ராமன் (8144930848) ஆகியோரும், பகுதி -14க்கு திலகவதி (8144905905), எஸ்.பிரேமா (8144930924) ஆகியோரும், பகுதி -15க்கு ஆர்.மோகன் (8144930989), கே.கலைச்செல்வன் (8144930589) ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பருவமழை காலங்களில் சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகளை கண்காணிப்பதோடு, சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளுடன் ஒருங்கிணைப்பு பணிகளை இச்சிறப்பு அலுவலர்கள் மேற்கொள்வார்கள். மேலும், பொதுமக்கள், தங்கள் பகுதியில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் தொடர்பான குறைகளை இந்த அலுவலர்களைத் தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: