வேளச்சேரி: மேடவாக்கம், புஷ்பா நகரை சேர்ந்த ரவுடி பிரைட் ஆல்வின் (28) கடந்த 27ம் தேதி வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். அருகில், பெருமாள் (23) என்பவர் வெட்டு காயங்களுடன் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில், பள்ளிக்கரணையில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் பள்ளிக்கரைணையை சேர்ந்த அஜய் என்பரின் தம்பிக்கும், ஆல்வின் நண்பருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆல்வின் கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளார். இதற்காக ஆல்வின் ரூ10 ஆயிரம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதை அஜய் கண்டித்துள்ளார். அப்போது ஆல்வின் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அஜயை வெட்ட முயன்றார்.