அக்டோபர் 2ம் தேதி ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு அனுமதி அளித்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும்: தமிழக அரசு ஐகோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல்: இன்று விசாரணை

சென்னை: ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அணிவகுப்பு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை திரும்ப பெறக்கோரி தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது. இது, இன்று விசாரணைக்கு வருகிறது. தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து கடந்த 22ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் அணிவகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி மற்றும் திருவள்ளூர் மாவட்ட காவல்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி மறுத்துள்ளதாக கூறி ஆர்.எஸ்.எஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று முறையீடு செய்யப்பட்டது.

நீதிபதி இளந்திரையன் முன் ஆஜரான ஆர்எஸ்எஸ் தரப்பு வழக்கறிஞர்கள், கடந்த 22ம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யும் வகையில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி அளிக்க வேண்டும். மற்ற கட்சியினர் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியளிக்கும் நிலையில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரினர்.

இதைக்கேட்ட நீதிபதி இளந்திரையன், நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு பதிலாக தமிழக அரசு அனுமதி அளிக்க மறுத்ததை எதிர்த்து வழக்கு தொடரலாம் என்று அறிவுறுத்தினார்.இந்த நிலையில், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டம் -ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி அணிவகுப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, அனுமதி வழங்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. சட்டம் -ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி அணிவகுப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, அனுமதி வழங்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்ப பெற வேண்டும்.

Related Stories: