வட சென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

சென்னை : மீஞ்சூர் அடுத்த வடசென்னை அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்ப பழுது காரணமாக, 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ளது வடசென்னை அனல் மின் நிலையம். இங்கு, முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், 2வது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இதில், 1வது நிலையில் உள்ள 3வது அலகில் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: