சென்னையில் யாரும் உரிமை கோரப்படாத 607 வாகனங்கள் வரும் 15ம் தேதி ஏலம்: மாநகர காவல்துறை அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகர காவல் எல்லையில் யாரும் உரிமை கோராத பைக் உள்பட 607 வாகனங்கள் புதுப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில் வரும் 15ம் தேதி ஏலம் விடப்படும் என்று மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உரிமை கோரப்படாத மற்றும் கைவிடப்பட்ட 595 பைக்குகள், 11 ஆட்டோக்கள், ஒரு கார் என மொத்தம் 607 வாகனங்கள் சென்னை புதுப்பேட்டை காவல் ஆயுதப்படை மைதானத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் வரும் 15ம் தேதி காலை 10 மணிக்கு பகிரங்க ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்த ஏலத்திற்கான முன்பதிவு வரும் 6 மற்றும் 7ம் தேதிகளில் காலை 10 மணி முதல் 2 மணி வரை சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏலத்தில் அடையாள அட்டை மற்றும் ஜிஎஸ்டி பதிவெண் சான்றுடன்  வரும் நபர்கள் முட்டுமே முன்பதிவு கட்டணம் செலுத்த அனுமதிக்கப்படுவர். முன்பணம் செலுத்தி பதிவு செய்த ஏலதாரர்கள் முன்னிலையில் வரும் 15ம் தேதி காலை 10 மணிக்கு ஏலம் நடைபெறும், ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்கள் ஏலத்தொகை மற்றும் ஜிஎஸ்டி தொகையை ஏலம் நடந்த மறுநாள் முழுவதுமாக செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: