சென்னை: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பேராசிரியர் நகரை சேர்ந்தவர் பழனி. சென்னை தலைமை செயலகத்தில் நிதி துறையில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வித்யா (40). இரட்டை குழந்தைகள் பூர்ணிமா, பூர்விகா (4). இவர்கள், உறவினர் இல்ல மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி ஓரிக்கை மணிமண்டபம் பகுதியில் நடந்தது. இதற்காக, நேற்று அதிகாலை பைக்கில் மனைவி வித்யா, குழந்தைகள் பூர்ணிமா, பூர்விகா ஆகியோருடன் பழனி சென்றார். காந்தி நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரில் அதிவேகமாக வந்த கல்குவாரி டாரஸ் லாரி எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது.