ஐஸ்வர்யா ராயுடன் நடிக்க பயந்தேன்: சொல்கிறார் சரத்குமார்

சென்னை: நடிகர் சரத்குமார் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: பொன்னியின் செல்வனில் பெரிய பழுவேட்டரையராக  நடித்திருக்கிறேன். எனக்கு பொன்னியின் செல்வன் நாவலை படிக்கத் தூண்டி அதன் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியவர் முன்னாள் முதல்வர் கலைஞர். ரஜினி நடிக்க விரும்பிய கேரக்டரில் நான் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடன் இணைந்து நந்தினி கேரக்டரில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். நான் இதுவரை எத்தனையோ ஹீரோயினுடன் நடித்திருந்த போதும் ஐஸ்வர்யா ராயுடன் நடிக்கும்போது பயமும், தயக்கமும் இருந்தது.

அதற்கு காரணம் அவர் உலக அழகி, இந்திய சினிமாவின் அடையாளமான அமிதாப்பச்சனின் மருமகள். அதனால் அவரை தொட்டு நடிக்க வேண்டிய காட்சிகளில் அவருக்கு தவறாக எதுவும் தோன்றி விடுமோ என்ற அச்சம் இருந்தது. ஆனால் ஐஸ்வர்யா ராய் ஒரு மிகச் சிறந்த நடிகை. நடிப்பை அர்ப்பணிப்புடன் வெளிப்படுத்துகிறவர். மிகவும் எளிமையானவர். இவ்வாறு சரத்குமார் கூறினார்.

Related Stories: