கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் 19வது நாளாக நகை சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நகை சரிபார்ப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை கடலூர் மாவட்ட துணை ஆணையர் ஜோதி தலைமையில் 6 பேர் குழு ஆய்வு செய்து வருகிறது. சிதம்பரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நடராஜர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சில நேரங்களில் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் நகைகளை கோவிலுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர். அவ்வாறு பக்தர்களால் வழங்கப்பட்ட நகைகள் முதன் முதலாக கடந்த 1955ம் ஆண்டு மதிப்பீடு செய்யப்பட்டது.