திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம், 1வது வார்டுக்கு உட்பட்ட எண்ணூர் நெட்டுக்குப்பத்தில் வசிக்கும் மீனவர்களின் பல குடிசைகளில் கழிவறை வசதி இல்லை. இதனால், பெண்கள் மற்றும் ஆண்கள் கடலோரத்தில் திறந்தவெளியை கழிப்பிடத்திற்காக பயன்படுத்தி வந்தனர். இதனால் இவர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நெட்டுக்குப்பத்தின் பிரதான தெருவில் மாநகராட்சி சார்பில் பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டது. இந்த கழிப்பிடத்தை அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், மாநகராட்சி பொதுக்கழிப்பிடத்தை சரியாக பராமரிக்கவில்லை. இதனால் இங்கு செயல்பட்டு வந்த தண்ணீர் மோட்டார் பழுதானது. மின்விளக்குகளும் எரியவில்லை.