சென்னை: கடந்த 9 ஆண்டுகளாக குடிநீர் வரி செலுத்தாத கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு ‘சீல்’ வைத்து சென்னை குடிநீர் வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் தொழிற்பேட்டையில் நியோ மெஜஸ்டிக் இன்ஜினியரிங் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் கடந்த 9 ஆண்டுகளாக குடிநீர், கழிவுநீர் வரியை செலுத்தவில்லை. இதுதொடர்பாக, சென்னை குடிநீர் வாரியம் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வரியை கட்டுவதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.