மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் மைதானமாக இருப்பதால் தவறான தகவல்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென எஸ்பிக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் வந்த பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 750 படுக்கைகள், 250 ஐசியூ படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை கட்டுமானப் பூர்வாங்கப் பணிகள் 95 சதவீதம் முடிந்துள்ளதாக கூறியிருந்தார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் துவங்காத நிலையில் நட்டாவின் அறிவிப்பு தென்மாவட்ட மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்னும் நிதி ஒதுக்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ், மதுரை எஸ்பி மற்றும் ஆஸ்டின்பட்டி போலீசாருக்கு இ-மெயில் மற்றும் பதிவுத்தபால் மூலம் புகார் அளித்துள்ளார்.