சென்னை: எடப்பாடி பழனிச்சாமியின் ஆக்கிரமிப்பு மூலம் அதிமுக தன்னை முழுமையான சாதிக்கட்சியாக பிரகடனம் செய்துள்ளது என்று ஓபிஎஸ் ஆதரவாளரான மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய மருது அழகுராஜ், அதிமுக சாதிக்கட்சியாக பிரகடனம் செய்துள்ளதை செங்கோட்டையன் பொது மேடையிலேயே அறிவித்துள்ளார். அமித்ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, சி.வி.சண்முகம் மட்டுமே டெல்லி சென்றிருந்தனர். டெல்லி சென்ற குழுவில் வேலுமணி, சி.வி.சண்முகம் தவிர உளுந்தூர்பேட்டைக்கு அப்பால் ஒருவரும் செல்லவில்லை.