சென்னை: கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 2020ம் ஆண்டு திமுக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. கரூரில் செந்தில் பாலாஜி தலைமையில் போராட்டம் நடந்தது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கொரோனா விதிகளை பின்பற்றவில்லை எனக் குற்றம்சாட்டி செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது கரூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.