துரைப்பாக்கம்: கடலூர் மாவட்டம், புவனகிரி பகுதியை சேர்ந்தவர் ராஜரங்கன் (63). இவர் தனது நண்பருடன் காரில் நேற்று அதிகாலை சென்னை புறப்பட்டார். காரை டிரைவர் வெங்கடேசன் ஓட்டி வந்தார். கடலூரில் இருந்து சென்னை கிழக்கு கடற்கரை சாலை வழியாக 3 பேர் பயணம் செய்தனர். கானத்தூர் பஸ் நிறுத்தம் அருகே கார் சென்றபோது, டிரைவர் வெங்கடேசன் தூக்க கலக்கத்தில் சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் காரை மோதினார். இதில், மின் கம்பம் உடைந்து கீழே விழுந்ததில், கார் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து 3 பேரையும் மீட்டனர்.