சென்னை: அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு அக்டோபர் 8ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவித்து தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 மதல் 8ம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவ மாணவியருக்கு தற்போது காலாண்டுத் தேர்வுகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள நிலைமைகளுக்கு ஏற்ப மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இம்மாத இறுதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.