பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் ஆ.நத்தம் ஊராட்சியில் உள்ள பொதுப்பணித்துறை ஏரியில் தற்போது தண்ணீர் நிரம்பியுள்ளது. ஏரியிலிருந்து பாசனத்திற்கு செல்லும் மெயின் மற்றும் கிளை வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு காரணமாகவும், நீண்ட நாட்களாக தூர்வாராமல் இருப்பதாலும் முறையாக தண்ணீர் தேவையான இடத்திற்கு கொண்டு செல்லமுடியாமல் வீணாக போகக்கூடிய நிலையில் உள்ளது.