குன்றத்தூர்: செம்பரம்பாக்கம் ஏரியில் செல்பி எடுக்கும் போது தவறி விழுந்து இருவர் பலியாகினர். குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (20). இவர் அதே பகுதியில் கார் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் ரிச்சர்ட்ஸ் (16). பிளஸ் 2 மாணவர். இருவரும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேற்று வந்தனர். ஏரியை சுற்றிப் பார்த்து விட்டு, ஏரிக் கரையின் மீது உள்ள சுவரில் நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது இருவரும் திடீரென நிலை தடுமாறி ஏரியின் உள்ளே தவறி விழுந்தனர்.