டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 22 பேருக்கு பணி நியமன ஆணை; முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: அறநிலையத்துறையில் செயல் அலுவலர் பதவிகளுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 22 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று, சென்னை தலைமை செயலகத்தில், இந்து சமய அறநிலைய துறையின் சார்நிலை பணியில் செயல் அலுவலர் பணியிடத்திற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 22 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில், அறநிலையத்துறை  அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமை செயலாளர் இறையன்பு, அறநிலையங்கள் துறை செயலாளர் சந்தரமோகன், ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: