சென்னை: தமிழகத்தில் வேகமாக பரவும் பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த, 9ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று டிவிட்டரில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட பலவகையான காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகின்றன. நடப்பாண்டில் இந்த வகை காய்ச்சல்கள் குழந்தைகளையே அதிக அளவில் தாக்குவது பெரும் கவலையையும், அச்சத்தையும் அளிக்கிறது.