பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை; ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் வேகமாக பரவும் பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த, 9ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று டிவிட்டரில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட பலவகையான காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகின்றன. நடப்பாண்டில் இந்த வகை காய்ச்சல்கள் குழந்தைகளையே அதிக அளவில் தாக்குவது பெரும் கவலையையும், அச்சத்தையும் அளிக்கிறது.

இன்னொருபுறம் டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. அனைத்து கிராமங்களிலும் மருத்துவ முகாம்களை தமிழக அரசு நடத்த வேண்டும். குழந்தைகள் ஒன்று கூடி விளையாடும் பள்ளிகள் வாயிலாகத் தான் காய்ச்சல் அதிக அளவில் பரவுவதாகத் தோன்றுகிறது. குழந்தைகளைக் காக்கவும், நோய்ப்பரவலை கட்டுப்படுத்தவும், நிலைமை சீரடையும் வரை, 9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: