சென்னை நுங்கம்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெற இருக்கும் டென்னிஸ் போட்டியை நேரில் காண்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெற இருக்கும் டென்னிஸ் போட்டியை காண முதல்வர்  மு.க. ஸ்டாலின் நேரில் செல்கிறார். சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் டென்னிஸ் மைதானத்தில் கடந்த 10-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி சென்னையில் நடைபெறுவது இதுவே முதன்முறையாகும்.

இந்த டென்னிஸ் தொடரில் ஒற்றையர் பிரிவில் 32 வீராங்கனைகளும், இரட்டையர் பிரிவில் 16 ஜோடிகளும் என முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெற இருக்கும் டென்னிஸ் போட்டியை காண முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் செல்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: