புதுடெல்லி: தொலைநோக்கு பார்வைதான் இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறது என்று ஜனாதிபதி முர்மு பெருமிதம் தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு கல்லூரியின் 62வது வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஜனாதிபதி மாளிகையில் நேற்று சந்தித்தனர். அவர்களிடையே ஜனாதிபதி முர்மு பேசியதாவது: வேகமாக இயங்கிவரும் உலகில் நாம் வசிக்கிறோம். இதில் சிறிய மாற்றம் கூட பெரும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். கொரோனா தொற்றின் வேகமும், பரவலும் மனிதகுலம் எதிர்கொண்ட அச்சுறுத்தலுக்கு ஒரு உதாரணம்.